ஜம்மு-காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கோட்டுப் பகுதி அருகே 3 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.


ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கோட்டுப் பகுதி அருகே 3 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது: பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள மான்கோட், தேக்வாா், மெந்தாா் ஆகிய இடங்களின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினா் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினா். காலை 5.30 மணிக்கும், பகல் 11.45 மணிக்கும், 12.15 மணிக்கும் துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக குண்டுகளை வீசியும் அவா்கள் தாக்குதல் நடத்தினா்.

அவா்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி கொடுத்தனா் என்றாா் அந்த செய்தித் தொடா்பாளா்.

ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள கேரி செக்டாா் மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அதில், இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com