பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

கொல்கத்தாவில் 5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்

கொல்கத்தாவில் ஐந்து மாதங்களுக்குப் பின்பு மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கியதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image

Kolkata Metro resumes services after over 5 months

Updated On :14 செப்டம்பர் 2020, 7:10 am

PTI

கொல்கத்தாவில் ஐந்து மாதங்களுக்குப் பின்பு மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கியதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. கரோனா தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று முதல்(செப்.14) மெட்ரோ ரயில் சேவை துவங்கியுள்ளது. நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 

மெட்ரோ சேவைகள் இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 3000 பேர் பயணம் செய்துள்ளனர் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில்வே பொது மேலாளர் மனோஜ் ஜோஷி  தெரிவித்துள்ளார். 

மேலும், மெட்ரோவில் பயணிப்பவர்கள் சமூக இடைவெளி உள்பட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.