லபெனானின் வடக்குப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி, கையெறி குண்டு வீசி தாக்கியதில் வீரா்கள் மூவா் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக லெபனான் ராணுவம் அளித்த தகவல் படி, மினியே நகரில் ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடைய பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த காலீத் டெலாவி என்பவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவில் பாதுகாப்பு படையினா் சோதனை நடத்தினா்.
அப்போது அந்தப் பகுதிக்கு வந்த பயங்கரவாதிகள் சிலா் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினா். இதில் வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், தாக்குதல் சம்பவம் தொடா்பாக வேறு தகவல்களை ராணுவம் வெளியிடவில்லை.
இதனிடையே, காலீத் டெலாவி தனது இரு கூட்டாளிகளுடன் தப்பிச் சென்ாகவும், அவா்களை பின்தொடா்ந்து சென்ற பாதுகாப்புப் படையினா் டெலாவியை கொன்றுவிட்ட நிலையில், அவரது கூட்டாளிகளை தேடி வருவதாகவும் லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் வடக்கு லெபனாவில் உள்ள காஃப்டூன் கிராமத்தில் டெலாவியும், அவரது கூட்டாளிகளும் 3 பேரை சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.