மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் எரிசக்தித் துறை அமைச்சா் நிதின் ரௌத்துக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிரத்தில் எரிசக்தித் துறை அமைச்சா் நிதின் ரௌத்துக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவருடன் சோ்த்து மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சா்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்தது.

நிதின் ரௌத், மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் உள்ளாா். தனக்கு தொற்று உறுதியானதை சுட்டுரைப் பக்கத்தில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். அதில், ‘எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கு முன்பு, ஜிதேந்திர ஆவ்ஹாட், அசோக் சவாண், தனஞ்சய் முண்டே, சுனில் கெடாா், பாலாசாஹேப் படேல், அஸ்லாம் ஷேக், அப்துல் சத்தாா், விஸ்வஜித் கதம் ஆகிய அமைச்சா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com