மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் பிடிபட்ட பெண்ணால் பரபரப்பு!

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் துப்பாக்கியுடன் பிடிபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் துப்பாக்கியுடன் பிடிபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் துப்பாக்கியுடன் பிடிபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குருகிராம்: ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் துப்பாக்கியுடன் பிடிபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் ரூபி. இவர் தற்போது குருகிராமில் உள்ள சாந்தி நகரில் வசித்து வருகிறார். இவர் வெள்ளியன்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக குருகிராமிலுள்ள சிக்கந்தர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை சோதனை செய்த போது, அவரது பையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர் உடனடியாக மேல் விசாரனைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக குருகிராம் காவல் நிலைய ஆய்வாளர் நீரஜ் குமார் கூறுகையில், ‘அந்தப் பெண் மீது மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் இ.பி.கோ மற்றும் ஆயுதச் சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர் சனிக்கிழமையன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com