கர்நாடகத்தில் கரோனாவிற்குப் பலியான காங்கிரஸ் எம்.எல்.ஏ

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் வியாழனன்று கரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் வியாழனன்று கரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் வியாழனன்று கரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் வியாழனன்று கரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளார்.

கர்நாடகத்தின் பிதார் மாவட்டம் பசவகல்யான் தொகுதியின் சட்டபேரவை உறுப்பினர் நாராயண் ராவ் (65). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் பெங்களூருவின் மணிப்பால் மருத்துவமனையில் வியாழன் மதியம் கரோனா பாதிப்பால் மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மணிஷ் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாராயண் ராவ் கடந்த 1-ஆம் தேதியன்று கரோனா தொற்றுடன் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து கடுமையான பாதிப்பின் விளைவாக அவரது உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன. அதன்காரணமாக உயிர் காக்கும் கருவிகளின் துணையோடு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இறுதியாக வியாழன் மதியம் 3.55 மணியளவில் அவர் உயிரிழந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com