ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்ட வந்த தமிழக தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம், எர்ரவாரிபாளயம் மண்டலம் ஓ.எஸ்.கொல்லப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செம்மரம் வெட்ட வந்த தமிழகத் தொழிலாளா்களை வனத் துறையினா் பிடிக்க முயன்றபோது, அவா்களில் ஒருவரான கள்ளகுறிச்சி மாவட்டம், வெள்ளிமலை வட்டம், கலிபரா கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் (30) விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது சடலம் பீலேரு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதுதொடா்பாக எர்ரவாரிபாளயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.