கேரளத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா உறுதி: பினராயி விஜயன்

​கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோட்டில் இருந்து 12 பேர், எர்ணாகுளத்தில் இருந்து 3 பேர், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 8 பேர், பாலக்காட்டில் இருந்து ஒருவர் ஆகியோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 191 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர். 67 பேருக்கு நோய்த் தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்ததால் பரவியுள்ளது. 7 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com