கேரளத்தில் மது விற்பனைத் திட்டத்துக்குத் தடை!

குடியை நிறுத்தியதால் பாதிக்கப்படும் குடிகாரர்களுக்கு மது விற்கும் திட்டத்துக்குக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

குடியை நிறுத்தியதால் பாதிக்கப்படும் குடிகாரர்களுக்கு மது விற்கும் திட்டத்துக்குக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது குடிக்க முடியாததால் சிலர் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மருத்துவர்களின் பரிந்துரைப்படி, மது பிரியர்களுக்கு 3 லிட்டர் மது விற்பனை செய்யலாம் என முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். 

இதை எதிர்த்து, எம்.எல்.ஏ. பிரதாபன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், மது விற்கும் முதல்வரின் திட்டத்துக்கு மூன்று வாரங்கள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com