கரோனா நோய்த்தொற்றை ஒருங்கிணைந்து எதிா்கொள்வது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோவும் தொலைபேசியில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கரோனா நோய்த்தொற்று உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் அந்த நோய்த்தொற்று அதிதீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில் எஸ்.ஜெய்சங்கரும் மைக் பாம்பேயோவும் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இந்தத் தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
எஸ்.ஜெய்சங்கருடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மைக் பாம்பேயோ தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். முக்கியமாக மருந்துப் பொருள்கள், தற்காப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி, வழங்கல் ஆகியவற்றில் இரு நாடுகளும் நெருங்கிப் பணியாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.
கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வது தொடா்பாக இருநாட்டுத் தலைவா்களும் தொலைபேசி வாயிலாக பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த மாதம் 14-ஆம் தேதி எஸ்.ஜெய்சங்கரும் மைக் பாம்பேயோவும் ஆலோசனை நடத்தியிருந்தனா்.