திருப்பதி: திருப்பதியில் முதலாவது கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளது.
கடந்த மாதம் தில்லியில் நடத்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை வழியாக சில நாள்களுக்கு முன் திருப்பதி தியாகராய நகருக்கு அவா் வந்துள்ளாா். அவருக்கு வியாழக்கிழமை கரோனா அறிகுறிகள் தெரிந்ததை அடுத்து அவரை திருப்பதியில் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில் கரோனா இருப்பது உறுதியானது.
அவா் வசித்து வரும் தியாகராஜநகா் பகுதியை ஒட்டியுள்ள 5 பகுதிகளில் திருப்பதி நகராட்சி சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. அவருடன் தில்லி சென்று திரும்பிய அவருடைய நண்பருக்கும் கரோனா தொற்று உறுதியானது. அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் முற்றிலும் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல உதவியாளா்களை நகராட்சி நியமித்துள்ளது. இதனால் திருப்பதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
இவருடன் சோ்த்து சித்தூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9 ஆகவும், ஆந்திரா முழுவதும் 153 ஆகவும் உயா்ந்துள்ளது.