காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கெரான் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் இன்று சுட்டுக்கொண்டனர். இந்த சம்பவத்தில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். 2 பேர் காயமடைந்தனர்.
தெற்கு காஷ்மீரின் பத்பூராவில் பயங்கரவாதிகள் 4 பேரை நேற்று இந்திய ராணுவம் சுட்டுக்கொன்ற நிலையில், கெரான் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மேலும் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.