பிகாரில் மேலும் 12 பேருக்கு கரோனா: மொத்த எண்ணிக்கை 51 ஆனது

பிகாரில் தொடர்ந்து இரண்டு நாட்களாக புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத
பிகாரில் மேலும் 12 பேருக்கு கரோனா: மொத்த எண்ணிக்கை 51 ஆனது

பாட்னா: பிகாரில் தொடர்ந்து இரண்டு நாட்களாக புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், இன்று 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 12 பேரில் 10 பேர் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்த மாநில நல்வாழவுத்துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்குச் சென்று வந்த ஒருவர் மூலமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த 10 பேரில் இரண்டு இளைஞிகள், 10 வயது சிறுவன், 20 முதல் 50 வயதுடைய 5 பெண்களும், 30 வயதில் இரண்டு ஆண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com