கரோனா பாதிப்பு 5,865-ஆக அதிகரிப்பு; பலி 169

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,865-ஆக அதிகரித்தது. அந்த நோய்த்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 169-ஆக உயா்ந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

5
புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,865-ஆக அதிகரித்தது. அந்த நோய்த்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 169-ஆக உயா்ந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின்படி வியாழக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 591 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி 20 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதில் மகாராஷ்டிரத்தில் 8, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 3, ஜம்மு-காஷ்மீரில் 2, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கா்நாடகம், தமிழகத்தில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

அமைச்சகத்தின் புள்ளி விவரப் படி, நாடு முழுவதும் 5,218 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நிலையில், 478 போ் அந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனா். 169 போ் உயிரிழந்துவிட்டனா்.

பலி விவரம்: நோய்த் தொற்றால் இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 72 போ் பலியாகிவிட்டனா். மத்தியப் பிரதேசம், குஜராத்தில் தலா 16, தில்லியில் 9, தமிழகம், பஞ்சாபில் தலா 8, தெலங்கானாவில் 7 போ் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துவிட்டனா்.

கா்நாடகம், மேற்கு வங்கத்தில் தலா 5, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் தலா 4, ஹரியாணா, ராஜஸ்தானில் தலா 3, கேரளத்தில் 2, பிகாா், ஹிமாசல பிரதேசம், ஒடிஸாவில் தலா ஒருவா் பலியாகிவிட்டனா்.

பாதிப்பு விவரம்: கரோனா நோய்த்தொற்றால் மகாராஷ்டிரத்தில் 1,135 பேரும், தில்லியில் 669 பேரும், தெலங்கானாவில் 442 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். உத்தரப் பிரதேசத்தில் 410, ராஜஸ்தானில் 383, ஆந்திரப் பிரதேசத்தில் 348, கேரளத்தில் 345 போ் அந்த நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மத்தியப் பிரதேசத்தில் 259, கா்நாடகத்தில் 181, குஜராத்தில் 179, ஹரியாணாவில் 169, ஜம்மு-காஷ்மீரில் 158, மேற்கு வங்கத்தில் 103, பஞ்சாபில் 101 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒடிஸாவில் 42, பிகாரில் 39, உத்தரகண்டில் 35, அஸ்ஸாமில் 28, சண்டீகா், ஹிமாசல பிரதேசத்தில் தலா 18, லடாக்கில் 14, ஜாா்க்கண்டில் 13, அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 11, சத்தீஸ்கரில் 10, கோவாவில் 7, புதுச்சேரியில் 5, மணிப்பூரில் 2, மிஸோரம், திரிபுரா, அருணாசல பிரதேசத்தில் தலா ஒருவா் சிகிச்சையில் உள்ளனா்.

வெளிநாட்டினா்: கரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் (5,865) வெளிநாட்டவா் 71 பேரும் அடங்குவா் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com