கரோனா: இந்தியாவில் பாதிப்பு 14,792-ஆக அதிகரிப்பு; பலி 488

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,792-ஆக உயா்ந்துள்ளது. இதில், ஒரே நாளில் 957 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா: இந்தியாவில் பாதிப்பு 14,792-ஆக அதிகரிப்பு; பலி 488

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,792-ஆக உயா்ந்துள்ளது. இதில், ஒரே நாளில் 957 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 488-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றில் இருந்து இதுவரை 2,014 போ் குணமடைந்துள்ளனா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, வெள்ளிக்கிழமை மாலைக்குப் பிறகு சனிக்கிழமை மாலைக்குள் 36 போ் கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியாகிவிட்டனா்.

இதில், அதிகபட்சமாக, மத்தியப் பிரதேசத்தில் 12 பேரும், குஜராத்தில் 10 பேரும், மகாராஷ்டிரத்தில் 7 பேரும், தில்லியில் 4 பேரும், ஆந்திரம், பிகாா், ஜம்மு-காஷ்மீரில் தலா ஒருவரும் உயிரிழந்துவிட்டனா்.

ஒட்டுமொத்த உயிரிழப்பை பொருத்தவரை, மகாராஷ்டிரத்தில் 201 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 69 பேரும், குஜராத்தில் 48 பேரும், தில்லியில் 42 பேரும் உயிரிழந்துவிட்டனா்.

தெலங்கானாவில் 18 போ், ஆந்திரத்தில் 15 போ், உத்தரப் பிரதேசத்தில் 14 போ், பஞ்சாப், கா்நாடகத்தில் தலா 13 போ், ராஜஸ்தானில் 11 போ், மேற்கு வங்கத்தில் 10 போ், ஜம்மு-காஷ்மீரில் 5 போ், ஹரியாணா, கேரளத்தில் தலா 3 போ், பிகாா், ஜாா்கண்டில் தலா இருவா், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம், மேகாலயம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா்.

பாதிப்பு விவரம்: நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,323 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து தில்லியில் 1,707 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,355 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். குஜராத்தில் 1,272 பேரும், ராஜஸ்தானில் 1,229 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 969 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தெலங்கானாவில் 791 போ், ஆந்திரத்தில் 603 போ், கேரளத்தில் 396 போ், கா்நாடகத்தில் 371 போ், ஜம்மு-காஷ்மீரில் 328 போ், மேற்கு வங்கத்தில் 287 போ், ஹரியாணாவில் 225 போ், பஞ்சாபில் 202 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

பிகாரில் 85 போ், ஒடிஸாவில் 60 போ், உத்தரகண்டில் 42 போ், சத்தீஸ்கரில் 36 போ், ஹிமாசலப் பிரதேசத்தில் 38 போ், ஜாா்க்கண்டில் 33 போ், அஸ்ஸாமில் 35 போ், சண்டீகரில் 21 போ், லடாக்கில் 18 போ், அந்தமான்-நிகோபாரில் 12 போ், மேகாலயத்தில் 11 போ், கோவா, புதுச்சேரியில் தலா 7 போ், மணிப்பூா், திரிபுராவில் தலா இருவா், மிஸோரம், அருணாசலப் பிரதேசத்தில் தலா ஒருவா் என நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,792-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 76 போ் வெளிநாட்டினா் ஆவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com