நாட்டில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1383 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,984 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 போ் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 603-இல் இருந்து 640 -ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து 617 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,260-இல் இருந்து 3,870 -ஆக அதிகரித்துள்ளது.
கரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 15,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3870 பேர் குணமடைந்துள்ளனர். நோய் பாத்தித்தோரில் 77 பேர் வெளிநாட்டினர்.
மாநில வாரியாக பாதிப்பு விவரம்:
* மஹாராஷ்டிரா- 5,218
* குஜராத் 2,178
* புதுதில்லி - 2,156
* ராஜஸ்தான்-1,659
* தமிழகம்-1596
* மத்திய பிரதேசம் - 1552
* உத்தர பிரதேசம்- 1,294
* தெலங்கானா- 928
* ஆந்திரம் - 757
* கர்நாடகம் -427
* கேரளம் - 423
* மேற்கு வங்கம் -418
* காஷ்மீர்-380
* ஹரியானா-254
* பஞ்சாப்-245
* பிகார் -126
* ஒடிசா-79
* ஜார்க்கண்ட்- 45
* உத்தரகாண்ட்- 46
* ஹிமாச்சல பிரதேசம்-39
* சத்தீஸ்கர்-36
* அசாம்-35
* சண்டிகர்-27
* லடாக்-18
* அந்தமான்-16
* மேகாலயா-12
* புதுச்சேரி- 07
* கோவா- 07
* திரிபுரா- 02
* மணிப்பூர்- 02
* அருணாச்சல பிரதேசம் - 01
* மிசோரம் - 01