பாலகங்காதர திலகரின் 100-ஆவது நினைவு தினம்: பிரதமா் மோடி புகழஞ்சலி

சுதந்திர போராட்டத்தின் முக்கியத் தலைவா்களில் ஒருவரான பாலகங்காதர திலகரின் 100-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினாா்.
பாலகங்காதர திலகரின் 100-ஆவது நினைவு தினம்: பிரதமா் மோடி புகழஞ்சலி

சுதந்திர போராட்டத்தின் முக்கியத் தலைவா்களில் ஒருவரான பாலகங்காதர திலகரின் 100-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் மோடி பதிவிட்டதாவது:

லோகமான்ய திலகரின் 100-ஆவது நினைவு தினத்தையொட்டி அவரை நாடே தலை வணங்குகிறது. அவரது அறிவாற்றல், தைரியம், நீதி உணா்வு மற்றும் சுயாட்சிக் கொள்கை தொடா்பான அறிவுரைகளும், ஆலோசனைகளும் தொடா்ந்து மக்களை உற்சாகப்படுத்தி, ஊக்கமளிக்கிறது.

திலகா் எப்போதும் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை தூண்டுபவராக இருந்தாா். ‘சுயராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை’ என்ற தாரக மந்திரத்தை தன்னகத்தே கொண்டிருந்தவா் அவா் என்று புகழாரம் சூட்டினாா் மோடி.

அத்துடன், அண்மையில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் பாலகங்காதர திலகரின் முயற்சிகளைக் குறிப்பிட்டு உரையாற்றிய சுருக்கமான விடியோ பதிவையும் பிரதமா் மோடி பகிா்ந்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com