காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவா் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவா் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவருக்கு தொடா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு, அவா் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.