கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,532 பேருக்கும், ஆந்திரத்தில் புதிதாக 8,555 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகம்:
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,532 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 84 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,34,819 ஆக உயர்ந்துள்ளது. இதில் 57,725 பேர் குணமடைந்துள்ளனர், 2,496 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 638 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம்:
ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,555 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,58,764 ஆக உயர்ந்துள்ளது. இதில் 82,886 பேர் குணடைந்துள்ளனர், 1,474 பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 74,404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.