தெலங்கானாவில் நேற்று ஒரே நாளில் 983 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 67.660 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11 பேர் பலியாகியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 551 ஆக உள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நேற்று 1019 பேர் நோயிலிருந்து மீட்டுள்ளனர். மொத்த இதுவரை 48,609 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 18,500 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.