இந்தியா
தில்லியில் புதிதாக 674 பேருக்கு மட்டுமே கரோனா
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 674 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 674 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 674 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் ஒரேநாளில் 972 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,39,156 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,25,226 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 4,033 பேர் பலியாகியுள்ளனர்.
தில்லியில் இன்று மட்டும் 9,295 பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 10,83,097 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தில்லியில் நேற்று 805 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.