இந்தியாவில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு தங்கம் இறக்குமதி 24% குறைந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு நாடுகளிலும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.
பொதுமுடக்கம் காரணமாக வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார அளவிலும் கடுமையான நெருக்கடிகள் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜூலை மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததைவிட 24% வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 39.66 டன் தங்கத்தை இறக்குமதி செய்த உலகின் இரண்டாவது பெரிய நுகர்வோராக இந்தியா இருந்தது. ஆனால், அது தற்போது குறைந்து நடப்பாண்டு 30 டன்னாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜூலை மாதத்தின் தங்க இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு 17.1 கோடி டாலர்களிலிருந்து 17.8 கோடி டாலர் வரை உயர்ந்துள்ளது. தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால் நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது.