அயோத்தி ராமர் கோயில் நெடிய போராட்டத்தின் நிகழ்வுகள்!

ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியில், மிகப் பெரிய ராமர் கோயில் விக்கிரமாதித்த மன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில் நெடிய போராட்டத்தின் நிகழ்வுகள்!


கி.மு. 100:  ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியில், மிகப் பெரிய ராமர் கோயில் விக்கிரமாதித்த மன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கி.பி. 1528: மொகலாய பேரரசர் பாபரின் படைத் தளபதி மீர் பாகி அயோத்தியில் பாபர் பெயரில் மசூதியைக் கட்டினார்; முன்னதாக அங்கிருந்த ராமர் கோயிலை இடித்ததாகக் கூறப்படுகிறது.

1853: நிர்மோஹி அகாரா மடத்தின் துறவிகள் பாபர் மசூதியைக் கைப்பற்ற முயற்சி; கலவரம்; பிரிட்டிஷ் அரசு மசூதி வளாகத்தை இரண்டாகப் பிரித்தது. மசூதியின் உள்ளே முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், வெளிப்புறத்தில் ராம்சாத்புராவில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

1857: முதல் இந்திய சுதந்திரப் போரின்போது அயோத்தி ராமர் கோயிலை ஹிந்துக்களிடம் அளிக்க முஸ்லிம்கள் முன்வந்தனர்; பிரிட்டிஷ் அரசு அனுமதிக்கவில்லை.

1883: மீண்டும் கோயிலை மீட்கும் முயற்சி பிரிட்டிஷ் அரசால் தடுப்பு; சுற்றிலும் வேலி அமைத்த மாவட்ட நிர்வாகம் வளாகத்தைப் பூட்டியது.

1885 ஜன. 27: அந்த இடத்திலேயே ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி, மஹந்த் ரகுவீர்தாஸ் பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு; நீதிபதிகள் நிராகரிப்பு.

1936: மீர் பாகி ஷியா முஸ்லிம் என்பதால், பாபர் மசூதி ஷியா முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று ஷியா சட்ட வாரியம் வழக்கு.

1946: பாபர் மசூதி கட்டப்பட்டது சன்னி முஸ்லிமான பாபருக்காக என்பதால், சன்னி முஸ்லிம்களுக்கே மசூதி சொந்தம் என பைசாபாத் நீதிமன்றம் தீர்ப்பு.

1949 டிச. 22- 23: பாபர் மசூதி வளாகத்தினுள் திடீரென, ராமர் விக்கிரகங்கள் வைக்கப்பட்டன. சிலைகளை அகற்றினால் கலவரம் வெடிக்கும் என்று கூறி, மத்திய அரசின் உத்தரவை ஏற்க பைசாபாத் மாவட்ட ஆட்சியர்  கே.கே.நாயர் மறுப்பு; வளாகம் பூட்டப்பட்டது.

1950 ஜன. 16: அயோத்தி பிரமுகர்கள் கோபால் சிங் விஷாரத், மஹந்த் ராமசந்திரதாஸ் ஆகியோர், ராமரை வழிபட உரிமை கோரி, பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு.

1959: சர்ச்சைக்குரிய அந்த இடம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று நில உரிமை கோரி நிர்மோஹி அகாரா வழக்கு.

1961: பாபர் மசூதிக்குள் உள்ள ராமர், சீதை சிலைகளை அகற்றக் கோரி சன்னி வக்பு வாரியம் வழக்கு.

1984: ராமர் கோயிலை மீட்க, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கல் ராமஜென்ம பூமி மீட்பு இயக்கத்தைத் துவக்கினார்.

1984,  அக். 7: பிகாரின் சீதாமர்ஹியில் இருந்து அயோத்தி நோக்கி ராமஜன்ம பூமி மீட்பு யாத்திரையை விஎச்பி துவக்கியது. பிரதமர் இந்திரா காந்தி படுகொலையால், போராட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது.

1985  அக். 31: உடுப்பியில் கூடிய துறவியர் மாநாடு, அயோத்தியில் ராமரை தரிசிக்க மசூதி வளாகத்தைத் திறக்க வேண்டும் என்று கோரியது; கோரக்பூர் மடத்தின் தலைவர் மஹந்த் அவைத்யநாத் (உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் குரு) தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. 

1986: பாபர் மசூதியைக் காக்க, பாபர் மசூதி நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.

1986 ஜன. 25: ராமர் கோயிலில் வழிபட கதவுகளைத் திறந்துவிடுமாறு பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் உமேஷ் சந்திர பாண்டே வழக்கு.

1986 பிப். 1: அயோத்தியில் ராமரை வழிபட சர்ச்சைக்குரிய இடத்தில் (பாபர் மசூதி வளாகம்) அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

1989: அயோத்தியில் ராமர் கோயில் அமைப்போம் என்று பாஜக தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

1989: பரிஷத் சார்பில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட, ராமர் பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பும் வகையில், நாடு முழுவதும் ராம்சிலா யாத்திரைகள் நடத்தப்பட்டன.

1989 நவ. 9: அயோத்தியில் சர்ச்சைக்குரிய வளாகத்துக்கு வெளியே ராம்சிலாநியாஸ் எனப்படும் பூமிபூஜை நடைபெற்றது.

1990 செப்டம்பர்: பரிஷத் சார்பில் நாடு முழுவதும் ராமஜோதி யாத்திரைகள் நடத்தப்பட்டன; கரசேவகர்கள் அயோத்தி நோக்கி செல்லுதல்.

1990 செப். 25: ராமர் கோயிலுக்கு ஆதரவு தெரிவித்து, குஜராத்தின் சோமநாதபுரத்தில் இருந்து அயோத்தி நோக்கி ராம ரத யாத்திரையை பாஜக தலைவர்  அத்வானி துவக்கினார்.

1990 அக். 23: பிகாரின் சமஸ்திபூரில் அத்வானி கைது.

1990 அக். 30: அயோத்தியில் கூடிய கரசேவகர்கள் மீது முலாயம் சிங் அரசு துப்பாக்கிச் சூடு; பல கரசேவகர்கள் பலி.

1992 நவம்பர்: பரிஷத் சார்பில் ராமர் பாதுகை யாத்திரைகள் நாடு முழுவதும் நடந்தன; கரசேவகர்கள் மீண்டும் அயோத்தி நோக்கி செல்லுதல்.

1992 டிச. 6: அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிப்பு; அதே இடத்தில் ராமருக்கு தற்காலிக கோயில் அமைப்பு; நாட்டின் பல இடங்களில் மதக் கலவரம்; சுமார் 1,500 பேர் பலி. உ.பி. ம.பி, ராஜஸ்தான், ஹிமாசல் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சிகள் கலைப்பு.

1992 டிச. 10: ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய ஹிந்து அமைப்புகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டன.

1992 டிச. 16: பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க நீதிபதி எம்.எஸ்.லிபரான் ஆணையம் அமைப்பு.

1993 ஜனவரி: சர்ச்சைக்குரியதாக இருந்த பாபர் மசூதி வளாகத்தின் 2.77 ஏக்கர் நிலமும், அதன் அருகில் உ.பி. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 67.7 ஏக்கர் நிலமும் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டன.

1993 ஜன. 25: ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக, ராம ஜன்மபூமி நியாஸ் அமைப்பு மஹந்த் ராமசந்திர தாஸ் பரமஹம்ஸர் தலைமையில் உருவாக்கப்பட்டது; அயோத்தியில் கரசேவகபுரம் என்ற இடத்தில் கோயில் தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் துவக்கம்.

1993 ஜூன் 4: ஹிந்து அமைப்புகள் மீதான தடை, நீதிபதி பாஹ்ரி தீர்ப்பாயத்தால் நீக்கப்பட்டது.

1993 அக். 5: மத்திய புலனாய்வு அமைப்பால் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை துவக்கம். இதில் பாஜக தலைவர்கள் அத்வானி, ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, பரிஷத் தலைவர்கள் அசோக் சிங்கல், வினய் கத்தியார் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு.

1998 மார்ச் 19: அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அமைந்தது. ராமர் கோயிலுக்கான முயற்சிகள் மீண்டும் துவக்கம்.

2002- 2003: காஞ்சி சங்கராசாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமரசப் பேச்சு.

2002 பிப்ரவரி: அயோத்தியில் ராமசேவகர்களின் பூர்ணாஹுதி மகா யக்ஞம். இதில் கலந்துகொண்டு குஜராத் திரும்பிய ராமசேவகர்கள் சென்ற ரயில் கோத்ரா ரயில் நிலையத்தில் எரிக்கப்பட்டதில் 59 பேர் பலி. இதையடுத்து குஜராத்தில் பெரும் மதக் கலவரம்.

2002, ஏப்ரல்: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெü சிறப்பு அமர்வில், அயோத்தி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு விசாரணை துவக்கம்.

2003 ஜனவரி: அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்னர் கோயில் இருந்ததா என்பது குறித்து இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வைத் துவக்கியது.

2003 ஆகஸ்ட்: தொல்லியல் ஆய்வு நிறுவனம் அளித்த அறிக்கை, அங்கு அடித்தளத்தில் மிகப் பெரிய கோயில் இருப்பதை உறுதிப்படுத்தியது.

2009 ஜூன் 30: 17 ஆண்டுகள் கழித்து, லிபரான் ஆணையம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கை சமர்ப்பிப்பு. இதில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, அசோக் சிங்கல் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2010 செப். 30: அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.வி.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, அயோத்தி நில உரிமை வழக்கில் தீர்ப்பு வழங்கியது. "பால ராமர் (ராம் லல்லா), நிர்மோஹி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்புக்கும் 2.77 ஏக்கர் நிலத்தை சமமாகப் பங்கிட்டு அளிக்க வேண்டும்; தற்காலிக ராமர் கோயில் அமைந்துள்ள முந்தைய மசூதியின் மைய இடம் ராம்லல்லாவுக்கு சொந்தமானது' என்று நீதிபதிகள் தீர்ப்பு.

2011 மே 9: உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மூன்று தரப்பினரும் மனுச் செய்ததால், தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை.

2017 ஆகஸ்ட்: ராமர் கோயில் நில உரிமை வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் அமர்வு விசாரணை துவக்கம்.

2019 ஜனவரி: உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான  ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரணை துவக்கம்.

2019 மார்ச் 8: முன்னாள் நீதிபதி எஃப்.எம்.ஐ.கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரசக் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்.

2019, ஆக. 2: சமரச முயற்சிகள் வெற்றி பெறவில்லை என, மூவர் குழு அறிக்கை தாக்கல்.

2019 அக். 15: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வால் 40 நாட்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட வழக்கு நிறைவு.

2019 நவ. 9: உச்சநீதிமன்றம் அயோத்தி நில உரிமை வழக்கில் இறுதித் தீர்ப்பளித்தது. "சர்ச்சைக்கு உரியதாக இருந்த குறிப்பிட்ட 2.77 ஏக்கர் நிலமும் ராம்லல்லாவுக்கே சொந்தம்; அந்த இடத்தில் ராமர்கோயில் அமைக்க அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்க வேண்டும்; இஸ்லாமியர்கள் மசூதி கட்ட தனியே 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் அளிக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

2020 பிப். 5: அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க, மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்தúக்ஷத்ர அறக்கட்டளையை அமைப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் அறிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 2.77 ஏக்கர் நிலத்தையும், ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ள 67.7 ஏக்கர் நிலத்தையும் கோயில் கட்ட அளிப்பதாகவும் அவர் அறிவித்தார்.

2020 ஜூலை 28: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் தில்லி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலங்கள் பதிவு நிறைவு. 

2020 ஆக. 5: அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் அமைப்பதற்கான பூமிபூஜைக்கு ஏற்பாடு. 

தொகுப்பு: வ.மு. முரளி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com