தாராவியில் இன்று ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதி

​ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (புதன்கிழமை) ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவியில் இன்று ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதி
தாராவியில் இன்று ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதி


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (புதன்கிழமை) ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,589 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,254 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தாராவியில் 77 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் கரோனா ஹாட்ஸ்பாட்டாக இருந்த தாராவியில், தற்போது தொடர்ந்து ஒற்றை இலக்கிலேயே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக, கடந்த ஜூலை 7-இல் ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜூலை 4 மற்றும் ஜூலை 26-இல் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜூலை 8 மற்றும் ஜூலை 28-இல் 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com