மும்பை தாராவிப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த சில நாள்களாக ஒற்றை இலக்கிலேயே கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. புதன்கிழமை ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று புதிதாக 8 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,597 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,257 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று 77 ஆக இருந்த நிலையில், இன்றைக்கு 82 ஆக உயர்ந்துள்ளது.