ஆந்திரத்தில் 10,080, கர்நாடகத்தில் 7,178 பேருக்கு புதிதாக கரோனா

ஆந்திரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 10,080 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,178 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 10,080 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,178 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
ஆந்திரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 10,080 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,178 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


ஆந்திரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 10,080 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,178 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம்:

ஆந்திரத்தில் புதிதாக 10,080 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,17,040 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 97 பேர் பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,939 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,29,615 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 85,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,178 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 93 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக பெங்களூருவில் மட்டும் 2,665 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,72,102 ஆக உயர்ந்துள்ளது. இதில் 89,238 பேர் குணமடைந்துள்ளனர். 3,091 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 79,765 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com