மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 12,822 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய அந்த மாநில சுகாதாரத் துறையின் இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 12,822 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,03,084 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 275 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 17,367 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 11,081 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,38,262 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மகாராஷ்டிரத்தில் மொத்தம் 1,47,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி:
மும்பை தாராவிப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,612 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 83 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 80 ஆக இருந்த நிலையில், இன்று 83 ஆக கூடியுள்ளது.