திரிபுரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 146 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 14ஆக அதிகரித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் கரோனா தொற்றால் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் தற்போது ஆயிரத்து 875 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து இதுவரை 4 ஆயிரத்து 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.