திரிபுரா மாநிலத்தில் மேலும் 146 பேருக்கு கரோனா பாதிப்பு

திரிபுரா மாநிலத்தில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 146 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் மேலும் 146 பேருக்கு கரோனா பாதிப்பு
திரிபுரா மாநிலத்தில் மேலும் 146 பேருக்கு கரோனா பாதிப்பு

திரிபுரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 146 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 14ஆக அதிகரித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் கரோனா தொற்றால் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது ஆயிரத்து 875 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து இதுவரை 4 ஆயிரத்து 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com