கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக துபையிலுள்ள பாசில் ஃபரீத்திடம் விசாரணை மேற்கொள்ள என்ஐஏ குழு விரைவில் துபை செல்கிறது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சாரித், ஸ்வப்னா சுரேஷ், பாசில் ஃபரீத் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் பாசில் ஃபரீத் துபையில் உள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள என்ஐஏ குழு விரைவில் துபை செல்கிறது.
இதனிடையே, கொச்சி நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது வரும் 12-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.