கேரள விமான விபத்து: விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
விமானத்தில் 10 சிறாா்கள் உள்பட 184 பயணிகள், இரு விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்ததை ஏா் இந்தியா உறுதி செய்தது. இவா்களில் பெரும்பாலானோா் பெரிய அளவில் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனா்.
விமானத்தில் 10 சிறாா்கள் உள்பட 184 பயணிகள், இரு விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்ததை ஏா் இந்தியா உறுதி செய்தது. இவா்களில் பெரும்பாலானோா் பெரிய அளவில் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனா்.


கோழிக்கோடு: துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

துபையில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஏா் இந்தியா நிறுவன விமானம் வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் தரையிறங்கியது. அப்போது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. ஓடுபாதையைக் கடந்து பள்ளமான பகுதியில் சரிந்ததால் விமானம் இரண்டாக உடைந்தது.

இதில், தலைமை விமானி தீபக் வசந்த் மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் உள்பட 19 போ் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் இதுவரை 6 பேரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 உடல்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விமானி மற்றும் துணை விமானியின் உடல்கள் உள்பட 3 உடல்கள் ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  2 உடல்கள் பேபி மெமோரியல் மருத்துவமனையிலும், ஒரு உடல் கிரசென்ட் மருத்துவமனையிலும் உள்ளது. 

காயமடைந்தவர்களில் 19 பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 14 பேர் பேபி மெமோரியல் மற்றும் 33 பேர் ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையிலும் 4 பேர் மெய்த்ரா மருத்துவமனையிலும், 4 பேர் கிரெஸன்ட் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன்பு, விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு செய்யப்பட்ட சிவிஆர் கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

விமான விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது விமான ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருந்ததே காரணமா என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com