ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநில கரோனா பாதிப்பு நிலவரங்கள் பற்றிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆந்திரம்:
ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,820 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 97 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,27,860 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,38,712 பேர் குணமடைந்துள்ளனர், 2,036 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 87,112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடகம்:
கர்நாடகத்தில் புதிதாக 5,985 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 107 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,78,087 ஆக உயர்ந்துள்ளது. இதில் 93,908 பேர் குணமடைந்துள்ளனர், 3,198 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 80,973 பேர் சிகிச்சையில் உள்ளனர்.