கேரளத்தில் புதிதாக 1,211 பேருக்கு கரோனா உறுதி

​கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர்.
​கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். (கோப்புப்படம்)
​கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். (கோப்புப்படம்)


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர்.

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"கேரளத்தில் 1,211 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 108 ஆகியுள்ளது. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 76 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 78 பேர். 1,026 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 103 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இன்றைய நிலவரப்படி பல்வேறு மாவட்டங்களில் 1,49,357 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,745 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன." 

கேரளத்தில் இதுவரை 21,836 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 12,347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com