அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 218 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 714 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் பரவி வரும் கரோனா தொற்று பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் தற்போது 16 ஆயிரத்து 980 பேர் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.