தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,300 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,300 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,45,427 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 13 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,111 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,30,587 பேர் குணமடைந்துள்ளனர். இன்றை நிலவரப்படி அங்கு 10,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் இன்று 23,787 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 11,92,082 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.