புது தில்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சந்தித்துப் பேசினார்.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா கடந்த 7-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சந்தித்துப் பேசினார்.
திங்களன்று நடைபெற்ற இந்த சந்திப்பு ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
அதேபோல துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவையும் அவர் திங்களன்று உப ராஷ்டிரபதி நிவாஸ் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சரான மனோஜ் சின்ஹா பிரதமர் மோடி தலைமயிலான முதல் அமைச்சரவையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.