ஹிமாசலில் புதிதாக 51 பேருக்கு கரோனா பாதிப்பு

ஹிமாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 51 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹிமாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 51 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (வியாழக் கிழமை) உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில், மொத்த உயிரிழப்பு 16-ஆக உள்ளது,.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஹிமாசலப்பிரதேச மாநிலத்திலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இதுதொடர்பாக் ஹிமாசலப்பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 51 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,687-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,386 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 24 மணிநேரத்தில் எந்த உயிரிழப்பும் இல்லாததால், தொற்றால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com