ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான நபர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சோபியான் மாவட்டத்தின் கிலூரா பகுதியில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இதனிடையே தொடர்ந்து நடைபெற்ற ரோந்து பணியில் மேலும் 2 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய காவல்துறையினர், எண்கவுன்டரின் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. என்று கூறினார்.