தில்லியில் புதிதாக 2,024 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 2,024 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,73,390 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 22 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,426 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 1,54,171 பேர் குணமடைந்துள்ளனர். 14,793 இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் இன்று 20,437 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 15,69,096 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.