புதுச்சேரியில் இனி செவ்வாய் முழு முடக்கம் இல்லை: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் தற்போதைய நடைமுறையே அமலில் இருக்கும்.

புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை.

புதுச்சேரியில் என்னென்ன தளர்வுகள் அறிவிப்பது என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும்.

மத்திய அரசு அறிவித்த நான்காம் கட்ட தளர்வுகளை அமல்படுத்துவது குறித்தும் நாளை முடிவு செய்யப்படும்

மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அரசின் நடவடிக்கைகள் பயனளிப்பதில்லை

அடுத்து வீடு வீடாக சென்று மக்ககளுக்கு கரோனா பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com