புது தில்லி: இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 78,761 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35,42,733-ஆக அதிகரித்துவிட்டது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:
நாட்டில் இதுவரை 27,13,933 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 948 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 63,498-ஆக அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழந்தோா் விகிதம் 1.79-ஆக குறைந்துள்ளது.
கரோனாவில் இருந்து மீண்டவா்கள் விகிதம் 76.61-ஆக உள்ளது. 7,65,302 போ் சிகிச்சையில் உள்ளனா். இது 21.60 சதவீதமாகும்.
அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 24,103 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். தேசிய அளவில் உயிரிழந்த 63,498 பேரில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் வேறு வகை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை 4,14,61,636 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 29-ஆம் தேதி மட்டும் 10,55,027 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.