திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.1.84 கோடி வசூலானது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தபின் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனா். அதன்படி புதன்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.84 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.