ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கதுவா மாவட்டத்தில் ஹிராநகா் செக்டாருக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், கிராமங்களைக் குறிவைத்தும் பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தினா். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தொடங்கிய தாக்குதல், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணி வரை நீடித்தது. பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினா்(பி.எஸ்.எஃப்.) தக்க பதிலடி கொடுத்தனா். இந்த மோதல் காரணமாக, எல்லையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், இரவு முழுவதும் பதுங்கு குழிகளிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது என்றாா் அவா்.