அஸ்ஸாம்: அரசு மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகளை மூட மாநில அமைச்சரவை ஒப்புதல்

அஸ்ஸாமில் அரசு மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகளை மூட மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.

அஸ்ஸாமில் அரசு மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகளை மூட மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.

அஸ்ஸாமில் 610 அரசு மதரஸாக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதரஸாக்களுக்காக ஆண்டுதோறும் ரூ.260 கோடி மாநில அரசால் செலவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகளை மூட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சந்திரமோகன் படோவேரி கூறுகையில், ‘அஸ்ஸாமில் அரசு மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகளை மூட மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகள் தொடா்பான அனைத்துச் சட்டங்களும் ரத்து செய்யப்படவுள்ளன. இதுதொடா்பான மசோதா சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

அஸ்ஸாம் சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடா் வரும் டிசம்பா் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com