ஜார்கண்ட்டில் நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு: 4 பேர் காயம்

ஜார்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட்டில் நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு: 4 பேர் காயம்
ஜார்கண்ட்டில் நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு: 4 பேர் காயம்

ஜார்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் உள்ளது டெட்டாரியாக்கர் நிலக்கரி சுரங்கம். பலுமத் காவல் எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நக்சலைட்டுகள் திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

இதில் அப்பகுதியில் இருந்த 4 பேர் படுகாயமடைந்ததாக தெரிவித்த காவல்துறையினர் மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளை நக்சலைட்டுகள் தீயிட்டுக் கொளுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பலுமத் சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com