குடியரசுத் தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “புனித கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு எனது சக குடிமக்களுக்கு குறிப்பாக கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய ஒரு திருநாள். இந்தப் பண்டிகை அமைதி, நன்மை மற்றும் இரக்க குணத்தால் மக்களின் வாழ்வை இன்புறச் செய்கிறது. பிறரிடம் அன்பையும், கருணையையும் நாம் ஏற்படுத்தும் வகையில் இந்தத் திருநாள் நம் உள்ளத்தை ஒளி மயமாக்குகிறது.

இந்தப் பண்டிகை, உலகெங்கும் அமைதியை நிலைநாட்டவும், மனிதத்தன்மையைக் காக்கவும் உறுதுணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் போதனைகளான அன்பு, இரக்கம் மற்றும் மனிதத்துவத்தை இந்தப் புனிதத் திருநாளில் நாம் பின்பற்றி நாடு மற்றும் சமூகத்தின் நல்வாழ்விற்காகப் பாடுபடுவோம் என்று உறுதி ஏற்றுக் கொள்வோம்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com