மணிப்பூர் மாநிலம் சண்டேல் பகுதியில் வியாழக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
இது தொடா்பாக மாநில புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாலை 5.21 மணியளவில் நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 3.1 ஆக பதிவானது. சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பலரும் நிலநடுக்கத்தை உணா்ந்தனா். அங்கு அதிக மக்கள் வசிப்பதில்லை என்பதால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.