பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் (பிஎம்டிசி) பேருந்து ஓட்டுநர் ஒருவர், சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரைத் தாக்கிய காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின் விடியோவில், டிப்போ 28-இன் டிரைவர் சந்தோஷ் பாடிகர், அந்த நபரை பல முறை அறைந்தது பதிவு செய்யப்பட்டிருந்தது.
"இந்தச் சம்பவம் எங்கள் கவனதுக்கு வந்துள்ளது. தற்போது டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், மேலும் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று பிஎம்டிசியின் பிஆர்ஓ அஜித் டோரகல் கூறினார்.