‘உடான்’ விமானச் சேவை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள இரண்டாம் நிலை நகரங்களை விமானப் போக்குவரத்து சேவை மூலம் இணைப்பதற்காக, உடான் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017-இல் அறிமுகம் செய்தது. குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் இந்தத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.17 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.