காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும், இதன்காரணமாக பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது சோனியா காந்தி அதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.