அஸ்ஸாம் மாநிலம், கோல்பாரா மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து கழிவு நீரோடையில் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில், 6 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
குவாஹாட்டியில் இருந்து துப்ரி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்து சாலையோரமாக இருந்த மின் கம்பத்தின்மீது மோதிய வேகத்தில் அந்த வளைவில் இருந்த கழிவு நீரோடையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
ஒருவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். 30-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று அவா் தெரிவித்தாா்.
மீட்புப்பணியில் ஈடுபட்ட போலீஸாரும், ராணுவ வீரா்களும் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காயமடைந்தவா்களில் கவலைக்கிடமானவா்கள் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், லேசான காயமடைந்த மற்றவா்கள் கோல்பாரா அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.